Advertisment

கோவிஷீல்ட் அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறதா? - ஆய்வை விமர்சிக்கும் பாரத் பையோடெக்!

bhrat biotech

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட்ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு ஆய்வு கோவக்சினைவிட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதாகதெரிவித்தது. இதையடுத்து அந்த ஆய்வில் பல குறைகள் இருப்பதாக கோவாக்சினைதாயரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

Advertisment

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புத் திறன் ஒப்பீட்டு அறிக்கையில் நிறைய குறைகள் இருந்தன. அது (நிபுணர்களால்) மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடு அல்ல. புள்ளிவிவர ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வடிவமைக்கப்பட்ட ஆய்வு அல்ல.ஆய்வு வடிவமைப்பு மற்றும் நடத்தப்பட்ட விதம், முன்னரே தீர்மானிக்கப்பட்ட கருதுகோளைக் காட்டிலும் தற்காலிக பகுப்பாய்வைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்த ஆய்வு கிளினிக்கல் ட்ரையல்ரெஜிஸ்ட்ரி இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துகளுக்கான மத்திய நிலை கட்டுப்பாட்டுஅமைப்போ, தடுப்பூசிக்கான நிபுணர் குழுவோஇந்த ஆய்வை அங்கீகரிக்கவில்லை" என கூறியுள்ளது.

Advertisment

மேலும் பாரத் பயோடெக்நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படுமென்றும், மூன்றாவது கட்ட சோதனை தரவுகள் வெளியானவுடன் கோவாக்சின் தடுப்பூசிக்கு முழுமையான உரிமம் கோரி விண்ணப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்குத் தற்போதுவரை அவசரகாலஅங்கீகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus vaccine covaxin covishield
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe