கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்திக்க சென்ற பாஜக எம்.பி பிரக்யா தாகூரை மாணவர்கள் முற்றுகையிட்டு "பயங்கரவாதியேதிரும்ப போ" என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள மகன்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்திற்கு சென்ற பாஜக எம்.பி பிரக்யா தாகூரை அங்கிருந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். மேலும் "பயங்கரவாதியை திரும்ப போ" என கோஷமும் எழுப்பினர். பிரக்யா உடன் வந்திருந்த பாஜகவினர் மாணவர்களின் இந்த கோஷத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிரக்யா அங்கிருந்து வெளியேறினார். மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமினில் இருக்கும் பிரக்யா, கடந்த வாரம் விமானம் ஒன்றில் இருக்கையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.