Advertisment

காணாமல் போன பாரதியின் கைத்தடி...!!

bharathiyar birthday

பற்றியெரிந்தசுதந்திரப்போராட்டத்தில், அணையாததீக்கனலைத்தனது கவிதையால் ஏற்றி வைத்தவர் மகாகவி பாரதியார். தூத்துக்குடி, எட்டயபுரத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி 1882-ஆம் வருடம் பிறந்த, அந்த 'அக்கினிக்குஞ்சு' இறுதிவரை,பயணித்த இடமெல்லாம் தமிழையும், சுதந்திரத்தையும் ஒருசேர இறுகிப் பற்றிப் பிடித்தே பறந்தது.

Advertisment

மீசை கவிஞனான பாரதியின்139 -ஆவதுபிறந்தநாள்இன்று. தமிழகம் மட்டுமல்லாது உலகின் பலஇடங்களில் அவருக்குவைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அவரதுபோற்றத்தகு பெருமைகள்நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் வைக்கப்பட்டுள்ள மகாகவிபாரதியாரின் சிலையிலிருக்கும் கைத்தடிகாணாமல்போயுள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குடெல்லிமாநகராட்சி சிலையைச் சரியாகப் பராமரிக்காததே காரணம் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

Advertisment

bharathi statue issue in delhi

டெல்லி சுப்ரமணிய பாரதி மார்கில்உள்ள பாரதியாரின் சிலை1987-ஆம் அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியால் திறந்துவைக்கப்பட்டது. அன்றுமுதல்டெல்லிமாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தது பாரதியின்சிலை. இந்நிலையில், இன்று பாரதியாரின் பிறந்தநாள் என்பதால், அவரதுசிலைக்கு மாலை அணிவிக்க, அரசியல் தலைவர்கள் வந்தபொழுது, பாரதியாரின் சிலையில் இருந்தகைத்தடிகாணாமல் போயிருந்ததுகண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காணாமல் போன கைத்தடியை உடனே நிறுவவேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்டெல்லிதுணை முதல்வருக்குக் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.அதேபோல், காணாமல்போன பாரதியின்கைத்தடியை எடுத்துச் சென்றது யார்? எனடெல்லி போலீசாரும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bharathi birthday
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe