Skip to main content

மூன்றாவது கட்ட ஆய்வு தரவுகள் வெளியீடு; கோவாக்சின் செயல்திறன் எவ்வளவு? - பாரத் பயோடெக் தகவல்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

covaxin

 

கரோனா தடுப்பூசிகள் வழக்கமாக மூன்று கட்டமாக பரிசோதிக்கப்படும். இந்த மூன்று கட்ட பரிசோதனை தரவுகளைக் கொண்டே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் மூன்றாவது கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமலேயே கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பிறகு தங்களது தடுப்பூசியின் மூன்றாவது கட்ட ஆய்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது.

 

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளைப் பாரத் பயோடெக் தற்போது வெளியிட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஆய்வு முடிவின்படி கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒட்டுமொத்தமாக 77.8 சதவீதம் செயல்திறன் இருப்பதாக கூறியுள்ள பாரத் பையோடெக், கடுமையான அறிகுறிகளுடன் கூடிய கரோனா பாதிப்புக்கு எதிராக 93.4 சதவீதம் செயல்திறனை கோவாக்சின் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

 

மேலும், தற்போது உலகை அச்சுறுத்திவரும் டெல்டா வகை கரோனாவிற்கு எதிராக கோவாக்சின் 65.2 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளதாகவும் பாரத் பயோடெக் கூறியுள்ளது. நாடு முழுவதுமுள்ள 25 இடங்களில், 18 முதல் 98 வயதுவரையிலான, அறிகுறியுடன் கூடிய கரோனா பாதிப்பு ஏற்பட்ட 130 பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.