Skip to main content

கரோனா தடுப்பூசி: தன்னார்வலர் மரணம் - தடுப்பூசி நிறுவனம் விளக்கம்!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

covaxine

 

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் என்ற தடுப்பூசியை, மூன்றாவது கட்ட சோதனையின் போது செலுத்திக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இது குறித்து விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், "தன்னார்வலர், தடுப்பூசி சோதனைக்காக பதிவுசெய்த நேரத்தில், மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு பங்கேற்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதற்கான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்திருந்தார். மேலும் தடுப்பூசி செலுத்தியத்திலிருந்து ஏழு நாட்கள் கண்காணிப்பில், அவர் ஆரோக்கியமாகவும், எந்தப் பின்விளைவுகளும் ஏற்படாமல் இருந்தார். தடுப்பூசி செலுத்தப்பட்டு பூர்வாங்க மதிப்பாய்வுகள் நடந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு தன்னார்வலர் காலமானார். இது அவரின் மரணம் தடுப்பூசி ஆய்விற்கும் சம்பந்தமில்லாதது என்பதை குறிக்கிறது. அவர், ஆய்வுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொண்டாரா அல்லது மருந்தற்ற ஊசி (placebo) எடுத்துக்கொண்டாரா என்பது குறித்த தகவல்கள் இல்லாததால் உறுதிப்படுத்த முடியாது.

 

போபாலின் காந்தி மருத்துவக் கல்லூரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, இறந்தவருக்கு இதயம் செயலிழந்திருப்பதாகவும், அது விஷத்தினால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனக் கூறியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலர்களாக ஈடுபட வேண்டும்” - நடிகர் விஜய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Vijay People's Movement administrators should be involved as volunteers Actor Vijay

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர் துடைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை உதவி ஆணையர் ஷேக் மன்சூரின் 9791149789 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் பாபுவின் 9445461712 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் சுப்புராஜ் 9894540669என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், பொதுவாக 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; தன்னார்வலர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Mikjam storm damage; Chief Minister M.K.Stal's call for volunteers

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் (HELP DESK) சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Mikjam storm damage; Chief Minister M.K.Stal's call for volunteers

 

அதே சமயம் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை உதவி ஆணையர் ஷேக் மன்சூரின் 9791149789 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் பாபுவின் 9445461712 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் சுப்புராஜ் 9894540669என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், பொதுவாக 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

எனவே நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பதிவு செய்து கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.