Skip to main content

35 லட்சம் பெண்கள் பங்கேற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் பொங்கல் விழா!

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
pongal 1


கேரளாவில் பிரசித்த பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்காலை இன்று நடந்தது. இதில் சுமார் 35 லட்சம் பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.
     
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுத்தோறும் மாசி மாதம் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலையில் அம்மனுக்கு பூஜை மற்றும் மதுரையை ஆண்ட கண்ணகியின் மறு உருவமாக பாவித்து கண்ணகி சரிதமும் பாடப்பட்டு வந்தது.
     

pongal 2


இதில் முக்கிய நிகழ்ச்சியான இன்று பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவனந்தபுரம் மாவட்டத்தை சுற்றி 12 கி.மீ தூரம் சுற்றளவில் போடப்படும் பொங்காலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னே அடுப்பு வைக்க இடம் பிடித்தனர். மேலும் பொங்காலை இடுவதற்காக வெளியூர் பெண்கள் நேற்று மாலையில் இருந்தே கோவிலை சுற்றி குவியத் தொடங்கினார்கள்.
     
இன்று காலை 10.20 மணிக்கு கோவில் மேல்சாந்தி பண்டார அடுப்பு(தாய் அடுப்பு)யில் நெருப்பை பற்ற வைத்து பொங்காலையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அடுத்தடுத்து அடுப்புகளை பெண்கள் பத்த வைத்து பொங்காலையிட்டனர். கொஞ்ச நேரத்தில் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இதில் கேரளா மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த சுமார் 35 லட்சம் பெண்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பொங்காலை முடியும் தருவாயில் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்படும். ஏற்கனவே உலக புகழ் பெற்ற இந்த பொங்காலை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.
 

pongal 3


இந்த பொங்காலையை யொட்டி திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல் பொங்காலையில் கலந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகமும் செய்துள்ளது.
                               

சார்ந்த செய்திகள்

Next Story

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் எளிமையாக நடந்த பொங்கல் வழிபாடு!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

   

Pongal Worship at the River Bhagwati Amman Temple

 

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் 10 நாட்கள் திருவிழாவில் 9ஆவது நாள் மகம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் திருவிழா என்பது உலக பிரசித்த பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண்கள் கோயிலைச் சுற்றிப் பொங்கல் இட்டு வருவது வழக்கம். இது ஆண்டுதோறும் அதிகரித்து கோயிலிலிருந்து 15 கி.மீ. சுற்றளவில் பொங்கல் போடுவது நடைமுறையிலிருந்து வருகிறது.

 

அதேபோக கேரளாவின் பிற மாவட்டங்களிலும் அதே நாளில் பல பகுதிகளில் பெண்கள் பொங்கல் இடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் 2020- ல் நடந்த திருவிழாவின் போது 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அடுத்த ஆண்டு அதாவது 2021-ல் 43 லட்சம் பெண்கள் பொங்கலிடுவார்கள் என்று கோயில் நிர்வாகம் கருதியது.

 

ஆனால் கரோனா தாக்கத்தால் 2021-ல் பொங்கலிடுவதற்கு அரசு அனுமதிக்காததால், கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி பண்டார பானையில் மட்டும் கோயில் போற்றிகள் பொங்கலிட்டு வழிபட்டனர். அதே போல் இந்த ஆண்டு திருவிழா பிப்ரவரி 9- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து குத்தியோட்டத்துக்கான சிறுவர்களுக்குக் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தினமும் பூஜைகள் நடந்து வந்தது.

 

Pongal Worship at the River Bhagwati Amman Temple

 

இந்த நிலையில், இன்று (17/02/2022) 9ஆவது நாள் திருவிழாவான பொங்கல் விழா நடத்துவதற்கு அரசு அனுமதிக்காததோடு, மேலும் பொது இடங்களில் பொங்கலிடத் தடை விதித்து அவரவர் வீட்டு வளாகத்தில் பொங்கலிடுங்கள் என்று அறிவித்தது. இதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் சம்பிரதாயப்படி காலை 10.50 மணிக்குக் கோயில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரிப்பாடு ஸ்ரீ கோயிலிலிருந்து விளக்கில் தீபம் எடுத்து வந்து மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியிடம் கொடுத்து, அவர் பண்டார அடுப்பில் பற்ற வைத்துப் பொங்கல் வழிப்பாட்டைத் தொடங்கி வைத்தார். 

 

இதைத் தொடர்ந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் பக்தர்கள் அவரவர் வீடுகளில் "அம்மே நாராயணா" "தேவி நாராயாணா" என்ற மந்திரத்துடன் பொங்கலிட்டு வழிப்பட்டனர். மதியம் 01.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பூசாரிகளால் வீடுகளுக்குச் சென்று நிவேத்திய சடங்குகளை நிறைவேற்றினார்கள்.