இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய கொரோனா வகை தொற்று

PF7 corona  positive 4 people in West Bengal

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகசீனா, ஜப்பான், தைவான், தென்கொரியாஉள்ளிட்டநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ்கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, சீனாவில் ஒமிக்ரான்பி.எஃப்.7வகை கொரோனாதொற்று வேகமாக பரவி வருகிறது. இதைத்தடுக்கசீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மேற்கு வங்கம் வந்த 4 பேருக்கு ஒமிக்ரான்பி.எஃப்.7வகை கொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேற்கு வங்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்குஅனுப்பப்பட்டிருக்கிறது. அதில் 4 பேருக்கு பி.எஃப்.7வகை கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த4 பேரும்ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள்அமெரிக்காவில் இருந்து இந்தியாவந்துள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த 3 பேருக்கும்ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கும்பி.எஃப்.7வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் நால்வரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகசுகாதாரத்துறை தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical
இதையும் படியுங்கள்
Subscribe