Skip to main content

ஸ்விக்கி நிறுவன பெயரால் மோசடி... 95,000 ரூபாயை இழந்த பெண்...

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்கிவரும் ஸ்விக்கி நிறுவனம் புதிதாக 'ஸ்விக்கி கோ' என்ற பெயரில் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் பொருட்களை நகரின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பலாம். இந்த சேவை இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டு வருகிறது.

 

bengaluru woman lost 95000 rupess to fake swiggy go customer care

 

 

அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி இந்த சேவை பெங்களூரு நகரில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட அந்த தினமே இந்த சேவையை பயன்படுத்திய ஒரு பெண்ணிடமிருந்து ஒரு கும்பல் 95,000 ரூபாயை மோசடி செய்துள்ளது.

பெங்களூரு நகரை சேர்ந்த அபர்ணா தாக்கர் சூரி(47) என்ற பெண் தனது கைப்பேசியை விற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஓஎல்எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிலால் என்பவர் அபர்ணாவை தொடர்பு கொண்டு கைப்பேசியை வாங்க ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவரிடம் கைப்பேசியை கொண்டு சேர்க்க அபர்ணா ‘ஸ்விக்கி கோ’ சேவையில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் சரியான முகவரியை கொடுக்காததால் அந்தக் கைப்பேசி பிலாலிடம் சென்று சேரவில்லை. 

இதனைத் தொடர்ந்து அபர்ணா ஸ்விக்கி கோ டெலிவரி நபரிடம் தொடர்பு கொண்ட போது அந்தக் கைப்பேசி ஸ்விக்கி அலுவலகத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அபர்ணா ‘ஸ்விக்கி கோ’ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ள நினைத்துள்ளார். எனவே கூகுள் மூலமாக கிடைத்த ஒரு எண்ணிற்கு அவர் தொடர்புகொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், மீண்டும் மற்றொரு ஆர்டர் செய்தால் அவரது கைப்பேசி உரிய இடத்தில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே அபர்ணா தனது கைப்பேசிக்கு வந்த ஒரு லிங்க் மூலம் மீண்டும் அந்த ஆர்டரை செய்துள்ளார். அப்போது அபர்ணாவின் வங்கி கணக்கு விவரம் மற்றும் யுபிஐ ஐடி உள்ளிட்டவை கேட்கப்பட்டுள்ளது. இதனைக் கொடுத்த சிறிது நேரத்தில் அபர்ணாவின் வங்கி கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அபர்ணா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விக்கி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “அபர்ணா ஸ்விக்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைக்கவில்லை. அவர் வேறு ஒரு எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அளித்துள்ளார். எனவே இந்த அளவிற்கு பணத்தை இழந்துள்ளார். மேலும் ஸ்விக்கி நிறுவனம் எப்போதும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரத்தை கேட்காது என்பதை மீண்டும் நான் தெளிவு படுத்த விரும்புகிறேன்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.