Advertisment

பீம் ஆர்மி தலைவர் விடுதலை...

beem army

ஏப்ரல் 2ஆம் தேதி உபியில் உள்ள சஹரான்பூரில் பீம் ஆர்மி என்ற அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இந்த மாபெரும் ஊர்வலத்தில் அம்பேத்கர் சிலையை பீம் ஆர்மி அமைப்பினர் நிறுவ முயன்றனர். ஆனால், இதை அங்கிருந்த தாக்கூர் சமுகத்தினர் எதிர்க்க, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு காரணமான, பீம் ஆர்மியின் நிறுவனரும் தலைவருமான ராவண் ஜூன் 8-ல் கைது செய்யப்பட்டார்.

Advertisment

நவம்பர் 2 ஆம் தேதி ராவணுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன் மறுநாள் மீண்டும் கைதான ராவண், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து கடந்த மாதன் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து, ராவணின் தாயார் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். இதை ஏற்று ராவண் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகளை வாபஸ் பெற்று, மேலும் அவரது ஜாமீன் மனு எதிர்ப்பதை உ.பி. அரசு கைவிட்டது. இதனால், நேற்று அதிகாலை 2:40 மணிக்கு ராவண், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Advertisment

Dalit raavan beem army
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe