Skip to main content

அப்பளம் கேட்டதற்காக அடிதடி... கலவர காடான கல்யாண மண்டபம்!

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Beaten for asking for waffles...  wedding hall!

 

கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டதற்காக ஏற்பட்ட தகராறில் கல்யாண மண்டபமே களேபரமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் முட்டம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபம் ஒன்றில் திருமண நிகழ்ச்சி ஜோராக நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருமண விருந்தில் மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது முறை அப்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறியதாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலைக்கு சென்றது. இதனால் மணமகன் தரப்பும், மணமகள் தரப்பு திருமண நிகழ்விடத்திலேயே மோதிக்கொண்டன. மேலும் இந்த மோதலில் கல்யாண மண்டபத்தில் உள்ள சேர் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் மண்டபத்தின் உரிமையாளர் முரளிதரன் இதனை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அவரும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த மோதலில் மொத்தம் 3 பேர் காயமடைந்து அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.