Skip to main content

காளையை சாய்த்த கரடி; பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பலத்த அடி!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

The bear leaning over the bull; Strike for stock market investors!

 

இந்திய பங்குச்சந்தையில் டிச. 13 - 17 வாரப்பகுதி, முதலீட்டாளர்களை தொடர்ந்து கொதி நிலையிலேயே வைத்துவிட்டு முடிந்திருக்கிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (டிச. 17) சென்செக்ஸ் தடாலடியாக 889.40 (1.54%) புள்ளிகளும், நிப்டி 263.20 (1.53%) புள்ளிகளும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளன. பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பொருத்தவரை இது ஒரு கருப்பு வெள்ளியாகவே பார்க்கப்படுகிறது. 

 

ஒமிக்ரான் வைரஸ் பரவல் மீதான அச்சம், மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு, அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

குறிப்பாக, அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம், இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்தது.

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டி வரலாற்றில் முதன்முறையாக கடந்த அக். 19ம் தேதி 18604 புள்ளிகள் வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது 16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது. 

 

கடந்த வாரம் 17516 புள்ளிகளாக அதாவது 3.5 சதவீதம் வரை உயர்ந்த நிப்டி, நடப்பு வாரம் அதே வேகத்தில் 17000 புள்ளிகளாக (3 சதவீதம்) சரிந்தது. வாரத்தின் கடைசி வர்த்தக தினமான டிச. 17ம் தேதி, தேசிய பங்குச்சந்தை நிப்டி 263.20 புள்ளிகள் சரிந்து 16985.20 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை  சென்செக்ஸ் 889.40 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 57011.74 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 

 

''பெடரல் வங்கி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு, பணப்புழக்கத்தை மேலும் இறுக்குவதும், வரும் ஆண்டில் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழலாம் என்ற தகவலும்தான் சந்தைகளில் ஏற்பட்ட சரிருக்கு முககிய காரணங்கள்,'' என்கிறார் ஜோசப் தாமஸ். இவர், எம்கே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவன ஆராய்ச்சிப் பிரிரின் தலைவர். 

 

மேலும் அவர் கூறுகையில், ''ஒமிக்ரான் வைரஸ் தொற்று பிரச்னை உருவானதில் இருந்தே சந்தையில் சரிவும், அவ்வப்போது ஏற்ற இறக்கங்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா முதல் அலையின்போதும் இதே போன்ற எதிர்மறை தாக்கம் இருந்தது. எனினும், மத்திய பட்ஜெட்டில் நல்ல அம்சங்கள் இடம்பெறக்கூடும் என்ற தகவல்கள் வரும் வரை சந்தையில் இப்போதுள்ள நிலையற்றத் தன்மை தொடரும்,'' என்றும் கூறுகிறார் ஜோசப் தாமஸ். 

 

டிச. 10ம் தேதி அன்று 267.68 லட்சம் கோடியாக இருந்த மும்பை பங்குச்சந்தை மூலதனம் டிசம்பர் 17ம் தேதியன்று, 259.4 லட்சம் கோடியாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் சொத்து டிச. 13 & 17 வாரத்தில் 8.30 லட்சம் கோடி சரிந்துள்ளது. நடப்பு வாரத்தில் ஐந்து வர்த்தக நாள்களிலுமே காளையை தொடர்ந்து கரடி பதம் பார்த்தது என்றே குறிப்பிடலாம்.

 

கடந்த இரண்டு மாதங்களில், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 15.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிஎஸ்இ சந்தை மூலதனம் அதிகபட்சமாக டிச. 18ம் தேதியன்று 274.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு காலாண்டு முடிவுகள் வரத்தொடங்கும் காலம் வரை, அதாவது டிசம்பர் இறுதி வரை சந்தைகளில் ஏற்ற, இறக்கம் இருக்கும் என்பதோடு, எதிர்மறையான சார்பு நிலைகள் தொடரும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். 

 

''உலகளவில் மத்திய வங்கிகள் தங்கள் பணக்கொள்கையை கடுமையாக்குவதால் சந்தைகள் சரிவைக் கண்டன. வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். 

 

மேலும், சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் விரிவடையத் தொடங்கியிருப்பதும் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்கும்,'' என்கிறார் மோதிலால் ஆஸ்வால் நிதிச்சேவை நிறுவன சில்லரை விற்பனை ஆராய்ச்சிப்பிரிவுத் தலைவர் சித்தார்த்தா கெம்கா. 

 

''கரோனா மூன்றாவது அலை, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள், எதிர்கால தேவை போக்கு, உள்ளீட்டு செலவு மற்றும் பணவீக்கத்தின் விகிதம் ஆகியவை பங்குச்சந்தைகளின் போக்கை தீர்மானிக்கலாம். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை, வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் ஆகியவற்றின் போக்குகளும் சந்தை நிலவரத்தை நகர்த்தும் முக்கிய காரணிகளாக இருக்கும்,'' என்கிறார் கோட்டக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்கு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஷிபானி குரியன். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.