Skip to main content

"எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்க வேண்டும்" - ஒமிக்ரான் குறித்து எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

aiims chief

 

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.

 

இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 54 பெருக்கும், டெல்லியில் 22 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், "இங்கிலாந்தில் கரோனா பரவும் அளவைப் பார்க்கையில், இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும்" என எச்சரித்தார்.

 

இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, எந்த சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ஒமிக்ரானை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பிரிட்டனில் இருப்பதுபோல் நிலைமை மோசமாக இருக்காது என நம்புவோம். ஒமிக்ரான் குறித்து கூடுதல் தரவுகள் நமக்குத் தேவை. உலகின் பிற பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்கும்போதெல்லாம், நாம் அதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அதோடு எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்வதைவிட, ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராக இருப்பது நல்லது" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏன் வெளிநடப்பு? - சு. வெங்கடேசன் எம்.பி. விளக்கம்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Why opposition party mp's went out Su.Venkatesan answered in tweet

 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இன்று (10 ஆம் தேதி) பிரதமர் மோடி இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசவிருக்கிறார். 

 

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மதுரை எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசுகையில், “மதுரையில் ரூ. 1,977 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,627 கோடி ரூபாய்க்கான கடன் ஜெய்காவில் இருந்து எடுத்து மத்திய அரசின் செலவில் கட்டப்படுகிறது. மத்திய அரசு இந்தக் கடனைத் தீர்த்து வைக்கும். இதன் மூலம் தமிழக அரசுக்கு எந்தக் கடனும் இல்லை. மற்ற இடங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 740 படுக்கைகள் தான் இருக்கும், ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைகள் இருக்கும். கூடுதலாக இருக்கும் 150 படுக்கைகளும் தொற்று நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பு பிரிவாக செயல்படும்” எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது திமுக உறுப்பினர்கள் வெட்கம் வெட்கம் என முழக்கம் எழுப்பினர்.

 

Why opposition party mp's went out Su.Venkatesan answered in tweet

 

ஒரு கட்டத்திற்கு மேல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. கேட்டுவிட்டு போங்கள்” என்றார். தற்போது இந்த காணொளி பரவி வருகிறது. 

 

Why opposition party mp's went out Su.Venkatesan answered in tweet

 

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநடப்பு குறித்து பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “மதுரை எய்ம்ஸ் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜெய்காவிடம் கடன் வாங்கிக் கட்டுகிறோம்”. என்றார் நிதியமைச்சர். “எப்போ? எப்போ?” என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். 5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை. கட்டடமும் கட்டப்படவில்லை. கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

“95 சதவீதமா... இருந்த பெயர் பலகையை கூட காணவில்லை” - எம்.பி சு.வெங்கடேசன்

 

 

Next Story

அமைச்சர் செந்தில் பாலாஜி: எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைப்பு

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Minister Senthil Balaji; AIIMS Medical Group

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து இடைக்கால ஜாமீன் மனுவும், அமலாக்கத்துறை சார்பில் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

 

இதில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நடந்தது. மேற்குறிப்பிட்டுள்ள மற்ற இரு மனுக்கள் மீதும் நேற்று விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறையையே பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவும் அனுமதி அளித்தது.

 

மேலும், இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை விரும்பினால் அவர்கள் முடிவு செய்யும் மருத்துவ நிபுணர்கள் குழு செந்தில் பாலாஜியை பரிசோதிக்கலாம். அவரது உடல்நிலையை, சிகிச்சையை ஆராயலாம் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய மத்திய மருத்துவக் குழுவான எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கண்காணிக்க, இருதய சிகிச்சை நிபுணர்களுடன் கூடிய 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.