கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் அப்போதையமுதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசுதிட்டமிட்டேஇந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும், இது குறித்துஅவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும்கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 'இந்தியா: மோடிக்கானகேள்வி' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளஇந்த ஆவணப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டங்கள்தெரிவித்தது.
இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், ஒரு சார்பாக ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதைக் காட்டுகிறது எனஇந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் 'இந்தியா: மோடிக்கானகேள்வி' ஆவணப்படத்தை யூடியூப் நிறுவனம் தனது தளத்திலிருந்துநீக்கியுள்ளது.