Advertisment

சிப்ஸ் தர மறுத்த இளைஞர் மீது கொடூர தாக்குதல்-வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Barrage attack on a youth who refused to give chips - shocking video released!

மதுபோதையில் இருந்த நபர்கள் சிப்ஸ் கேட்டு தர மறுத்த இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அடுத்துள்ள வாழதுங்கல் பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்ற இளைஞர் கடையில் சிப்ஸ் வாங்கி சாலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக மதுபோதையில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் சிப்ஸ் கொடுக்குமாறு நீலகண்டனிடம் கேட்டுள்ளனர். ஆனால் இளைஞர் நீலகண்டன் சிப்ஸ் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த எட்டு பேரும் துரத்தி சென்று பிடித்து இளைஞரை கொடூரமாக தாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது படுகாயத்துடன் நீலகண்டன் கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe