Skip to main content

லக்னோ ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்க தடை... எதற்காக தெரியுமா..?

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ ரயில் நிலையம் மாநிலத்தில் உள்ள பெரிய ரயில் நிலையங்கள் ஒன்று. தொலைதூர ஊர்களுக்கு பயணம் செய்பவர்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமாக அந்த ரயில் நிலையம் உள்ளது. மேலும், ரயில் நிலையத்திற்கு வெளியே சிறு வியாபாரிகள் சிலர் வாழைப்பழங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் ரயில்களில் பயணிக்க வேண்டி அவசரமாய் சாப்பிடாமல் கிளம்பிவிடும் பயணிகள் கூட அங்கே விற்கும் வாழைப்பழங்களை வாங்கி கொண்டு செல்வார்கள். உடனடியாக பசி போக்கும் என்பதாலும், விலை குறைவு என்பதாலும் மக்களிடையே வாழைப்பழம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
 

gb



இந்நிலையில் வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கண்ட இடங்களில் வீசுவதால் ரயில் நிலையத்தை சுற்றி அசுத்தமாகிறது என்று கூறி ரயில் நிர்வாகம் வாழைப்பழ விற்பனையை தடை செய்துள்ளது. இதனால் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "  வாழைப்பழத்தால் மட்டுமே ரயில் நிலையம் அசுத்தம் ஆவதை போன்று அதிகாரிகள் வாழைப்பழம் விற்பதை தடை செய்துள்ளார்கள். நீண்ட தூரம் பயணம் செய்யும் வயதானவர்கள் செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு வாழைப்பழம் உதவியாக இருக்கும். தற்போது வாழைப்பழங்கள் தடை செய்யப்பட்டுள்ளாதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்கிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

West Bengal Kulti Railway Station fire incident

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அசன்சோலில் என்ற பகுதியில் குல்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் தளவாட பொருட்கள் வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.