ADVERTISEMENT
இந்நிலையில் புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
ADVERTISEMENT
முன்னதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர் மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களை ஆய்வு செய்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Show comments