Skip to main content

பஜ்ரங்தள் சர்ச்சை வீடியோவை ஃபேஸ்புக் நீக்காதது ஏன்..? வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்...

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

bajrangdhal video controversy

 

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை, சமூக ஊடகமான ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள சிறுபான்மையினருக்கு எதிரான அபாயகரமான அமைப்பென ஃபேஸ்புக்-ன் பாதுகாப்புக் குழுவால் சான்றளிக்கப்பட்ட நிலையிலும், பஜ்ரங்தளின் வீடியோ ஒன்றை அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபேஸ்புக் அனுமதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

 

ஜூன் மாதம் நியுடெல்லியின் புறநகர்ப் பகுதியில் கிறித்துவ தேவாலயம் ஒன்றின் மீதான தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு எனக் கூறும் காணொளிக் காட்சியொன்று ஃபேஸ்புக்-ல் பதிவிடப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் வரை ஃபேஸ்புக் குழுமம் அதை நீக்கவில்லை.

 

அந்தக் காணொளிக் காட்சியைத் தடைசெய்தால், இந்திய ஃபேஸ்புக் அலுவலகத்தில் பணிபுரியும் தங்களது ஊழியர்களுக்கு ஆபத்து நேரலாம்.. அதுபோல ஃபேஸ்புக்-ன் வியாபாரத்துக்கும் இடைஞ்சல்வரலாம் என்ற காரணத்தினாலேயே ஃபேஸ்புக் அதனைத் தடைசெய்யவில்லை என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரைக்குப் பதிலளித்த ஃபேஸ்புக்-ன் செய்தித்தொடர்பாளர் ஆன்டி ஸ்டோன், “கட்சி மற்றும் அரசியல் சார்பின்றியே உலகம் முழுவதும் ஆபத்தான தனிநபர்கள், அமைப்புகள் குறித்த எங்கள் கொள்கையைச் செயல்படுத்திவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.