Skip to main content

ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பட்ட பெண்கள்! குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Bail detained by kerala high court

 

                                                                                                                                                                                          கேரளாவில் இருந்து செவிலியர் மற்றும் படித்த இளம் பெண்களை அரபு நாடுகளில் சூப்பா் மார்க்கெட் போன்ற கடைகளில் அதிக சம்பளத்துடன் வேலை செய்வதற்காக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அங்கு அடிமை வேலைகளில் ஈடுபடுத்துவதோடு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான பாலியல் தேவைகளுக்கு சப்ளை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த கொடுமையிலிருந்து தப்பி வந்த 31 வயது இளம் பெண், கொச்சி கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி 200க்கு மேற்பட்டவர்களை அரபு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் 90 சதவீத பெண்களை வீட்டு வேலைக்கு அடிமைத் தனமாக இருக்க வற்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். ஏராளமான பெண்களை சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அவர்களின் பாலியல் தேவைகளுக்காக அனுப்பியுள்ளனர். இதுஎல்லாம் தெரிந்தே திட்டமிட்டு அந்த நிறுவனம் அனுப்பி வந்துள்ளது.

 

இது சம்பந்தமாக தரகராகச் செயல்பட்ட கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பானு ஃபர்கானா மற்றும் கண்ணூரைச் சேர்ந்த மஜீத், பத்தணம்திட்டயைச் சேர்ந்த அஜிமோன் ஆகியோர் மீது கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இதில் பானுவின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது, அவர் தப்பி குவைத்துக்கு சென்று தலைமறைவானார். அதே போல் மஜீத் பக்ரைனியில் உள்ளார்.


இதனைத் தொடர்ந்து ஃபர்கானா மற்றும் அஜிமோன் முன் ஜாமீன் கேட்டு எா்ணாகுளம் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதில் இருவருடைய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அஜிமோன் எா்ணாகுளம் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் ஃபா்கானா தலைமறைவாகியுள்ளார் இதனையடுத்து அவர் வெளி நாடு தப்பிச் செல்லாதபடி அவரின் பாஸ்போட்டை முடக்கி கேரளா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.