Advertisment

விமான கழிவறையில் குறைமாத கருவை வீசியெறிந்த விளையாட்டு வீராங்கனை!!

விமான கழிப்பறையில் பெற்ற குறைமாத சிசுவை வீசியெறிந்த சம்பவத்தினால் ஏற்பட்ட இடையூறுக்கு ஏர் ஆசியா நிறுவனம்பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Advertisment

மணிப்பூரிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தில் மணிப்பூர்-டெல்லி இடைப்பட்ட பயணத்தின் பொழுது விமான பணியாளர் ஒருவர்விமானக் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது கழிவறையில் ரத்தக்கறையுடன் குறைமாத சிசு ஒன்று இறந்த நிலையில்கழிவறையில் வீசி சென்றிருப்பதை கண்டு அதிர்ந்து விமான பயணிகளிடமும்,ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளார் அந்த பணியாளர்.

Advertisment

air asia

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அந்த சிசுவிற்கு பயணிகள் யாரும் முன்வந்து பொறுப்பேற்காததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விமானம் தரையிறங்கியவுடன் போலீசார் பயணிகளை இது தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள்விசாரித்தனர். இந்த விசாரணைக்கு பிறகு ஆண் பயணிகள் முதலில் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பெண் பயணிகளிடம் நடத்திய விசாரணையில் 19 வயதுடைய இந்தியவிளையாட்டு வீராங்கனை தான்தான் அந்த குழந்தையை கழிவறையில் பிரசவித்து வீசி எறிந்தேன் என தெரிவித்துள்ளார். அந்த 19 வயதுடைய வீராங்கனை யார் என்பது பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

மேலும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட இடையூறுக்குஏர் ஆசியாநிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது.

airport Child abuse Child Care delivery flight
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe