Advertisment

பாரதரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த பாபா ராம்தேவ்...

yhjng

பாபா ராம்தேவ் அடுத்த ஆண்டு சன்யாசி அல்லது துறவி ஒருவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 70 வது குடியரசு தின விழாவில் ராம்தேவ் பேசும்போது, 'கடந்த 70 ஆண்டுகளில் பாரத ரத்னா ஒரு சந்நியாசிக்கு கூட வழங்கப்பட்டதில்லை. மகரிஷி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் அல்லது சிவகுமார ஸ்வாமி, என யாருக்கும் இதுவரை பாரதரத்னா விருது வழங்கப்படவில்லை. எனவே அடுத்த வருடமாவது பாரத ரத்னா விருதை ஒரு சன்யாசிக்கு வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்' என கூறினார். இந்த ஆண்டுக்கான பாரதரத்னா விருதை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புகழ்பெற்ற பாடகர் பூபேன் ஹசிகா மற்றும் இறந்த சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக் ஆகியோர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

baratha rathna babaramdev
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe