அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அறிவுறுத்தல். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசுகள் அதிகபட்ச கண்காணிப்பில் ஈடுபடுமாறும், உளவுத்துறை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைள் எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை.இதனையடுத்து அந்தந்த மாநில காவல்துறை தலைவர்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரும் 13- ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.