/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ram_6.jpg)
அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ஸ்ரீ ராமாயண விரைவு ரயில் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராமர் வாழ்ந்ததாக கூறப்படும் இடங்கள் வழியாக ஆயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை இந்த ஆன்மிக சுற்றுலா விரைவு ரயில் செல்கிறது. நேற்று டெல்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து, ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. அயோத்தியின் ஹனுமன் கிரியிலிருந்து தொடங்கி, ராமர் வாழ்ந்ததாக கருதப்படும் ராம்கோட், நந்திகிராம், சீதாமார்ஹீ, ஜனக்பூர், வாரணாசி, பிராயக், சிறிங்காவ்பூர், சித்திரகோட், நாசிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் வரை செல்கிறது. இதில் 800 பேர் வரை பயணிக்கலாம் என்றும், இந்த ரயில் சேவையில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு திரும்ப 16 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)