Skip to main content

அயோத்தி உள்ளாட்சி தேர்தல்: பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த இஸ்லாமியரின் வெற்றி

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

ayodhya corporation local body election islamic candidate won 

 

அயோத்தி மாநகராட்சியில் உள்ள வார்டு ஒன்றில் இஸ்லாமிய வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ள நிகழ்வு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

 

அயோத்தியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 27 இடங்களை பாஜக கைப்பற்றியது. சமாஜ்வாதி கட்சி 17 வார்டுகளிலும், சுயேச்சைகள் 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். ராம் ஜென்மபூமி கோவில் இயக்கத்தின் முக்கியப் பிரமுகரின் பெயரிடப்பட்ட ராம் அபிராம் தாஸ் வார்டானது அயோத்தி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வருகிறது. இங்கு உள்ளூர் இஸ்லாமிய இளைஞர் சுல்தான் அன்சாரி உடன் சேர்த்து மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 2,388 வாக்குகளில் சுல்தான் அன்சாரி 42 சதவீத வாக்குகளை, அதாவது 996 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த மற்றொரு சுயேச்சை வேட்பாளர் நாகேந்திர மஞ்சியை 442 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வார்டில் பாஜக மூன்றாவது இடத்தைத்தான் பிடித்தது.

 

பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்கும் அயோத்தியில் உள்ள வார்டில் இஸ்லாமிய இளைஞர் வெற்றி பெற்றுள்ள நிகழ்வும், அதே வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிகழ்வும் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றி குறித்து சுல்தான் அன்சாரி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அயோத்தியில் இந்து-இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் இரு சமூகத்தினரின் அமைதியான சகவாழ்வுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்து சகோதரர்களிடமிருந்து எந்த பாரபட்சமும் இல்லை. மேலும், அவர்கள் என்னை வேற்று மதத்தை சேர்ந்தவராக நடத்தவில்லை. அவர்கள் எனக்கு ஆதரவளித்து என்னை வெற்றி பெற வைத்தனர்” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.