அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று (08/11/2019) உத்திர பிரதேச மாநில தலைமை செயலாளர், உத்தரபிரதேச மாநில டிஜிபியுடன்ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டம்- ஒழுங்கு விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்கிறார்.

Advertisment

AYODHYA CASE SUPREME COURT JUDGE DISCUSS WITH UP STATE DGP

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், தலைமை நீதிபதியின் ஆலோசனை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு நவம்பர் 13- ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.