ஆந்திராவில், சீனாவில் இருந்து வந்தவர்களை பார்த்து ஆட்டோ ஓட்டுநர்கள் பயந்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து 15 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோ ஓட்டுவர்களிடம் சென்று தங்களை அருகில் உள்ள ஹோட்டலில் இறக்கிவிடும் படி கேட்டுள்ளனர். ஆனால் சீனர்களை பார்த்த ஆட்டோ ஓட்டுவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அவர்களை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் கொரோனா நோய் பாதிப்பு அவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்து அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர்.
ADVERTISEMENT
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து 15 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோ ஓட்டுவர்களிடம் சென்று தங்களை அருகில் உள்ள ஹோட்டலில் இறக்கிவிடும் படி கேட்டுள்ளனர். ஆனால் சீனர்களை பார்த்த ஆட்டோ ஓட்டுவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து அவர்களை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் கொரோனா நோய் பாதிப்பு அவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்து அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments