Skip to main content

அங்கிள் என்று அழைத்த பெண் மீது தாக்குதல்!

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

jk

 

அங்கிள் என்ற தன்னை எவ்வாறு அழைக்கலாம் என்று கூறி இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தாக்கிய சம்பவம் உத்தராகண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் மோஞ்சி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கீதா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், பேட்மிண்டன் விளையாடுவதில் மாவட்ட அளவில் சிறந்த வீரராக உள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் நூற்றுக்கணக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். கல்லூரிகளுக்கு இடையேயான அனைத்து போட்டிகளுக்கும் கல்லூரியின் சார்பில் முதல் ஆளாக இவர் கலந்துகொண்டு பரிசுகளை குவித்து வந்தார்.

 

இந்நிலையில் கல்லூரிகளுக்கு இடையே சில நாட்களில் மீண்டும் போட்டி நடைபெற உள்ளதால் அதற்காக புதிய ராக்கெட் வாங்க முடிவு செய்தார்.  இதற்காக அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஒரு கடையில் விளையாட்டு கருவிகள் சிறப்பாக இருக்கும் என்று மாணவிகள் கூறியது அவருக்கு நினைவுக்கு வரவே, அந்த கடைக்கு சென்று ராக்கெட் மாடலை காட்டுமாறு கேட்டுள்ளார். இவர் உள்ளே சென்று கடைக்காரரை அங்கிள் எனக்கு ராக்கெட் மாடலை காட்டுங்கள் என்று கூறியதும், உடனடியாக கோபப்பட்ட அந்த கடைக்காரர் 35 வயதான நான் அங்கிளா? என்று கூறி அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்; 6 பேர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Assault on Sub-Inspector of Police; 6 people arrested

விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியில் கோவிலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதனை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை அங்கு இருந்த சிலர் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செஞ்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  இருதரப்பு மோதலை தடுக்க முயன்றார். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதோடு அவரது சட்டையையும் கிழித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை அழைத்துச் சென்று செஞ்சி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் அதிகாரியை தாக்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.