Skip to main content

17 வயது பெண் குழந்தைக்கு நடந்த கொடூரம்..! பெற்றோரை மிரட்டும் அரசியல் புள்ளிகள்!  

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

Atrocity against 17 year old girl ..! Political points that intimidate parents!

 

புதுச்சேரி, கிருமாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப் பின்பு காவ்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரே மகள் பிறந்தார். 17 வயதாகும் காவ்யா தற்போது பி.எஸ்.சி. சைக்காலஜி முதலாமாண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி காவ்யாவின் தாயார் பரமேஸ்வரி வெளியில் சென்றிருந்த நிலையில் காவ்யா மாடியில் துணி காயவைத்துக்கொண்டிருந்தார். 

 

அப்போது இவர்களது தெருவில் 4 வீடு தள்ளி வசித்துவந்த அருண்குமார் (24) என்ற இளைஞர் காவ்யா வீட்டின் பக்கவாட்டு வழியாக வீட்டினுள் புகுந்துள்ளார். காவ்யா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவுடன் கதவை சாத்திய அருண்குமார், காவ்யாவின் வாயில் துப்பட்டாவைத் திணித்து வாயை அடைத்து,  சுவற்றில் நெட்டித் தள்ளி அவரது வயிற்றில் தனது வலது காலால் உதைத்துள்ளார். இதில் காவ்யா மயக்கமான பிறகு, அவரது துணிகளைக் களைத்து மிருகத்தனமாக நடந்துள்ளார். மேலும், அருண்குமார் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார். அந்த வீடியோவைக் காவ்யாவிடம் காட்டி அவரது அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

 

கடந்த ஜூன் 6ஆம் தேதி மாதவிடாய் என்ற போதிலும் விடாமல் அவரை 4, 5 முறை வன்புணர்ச்சி செய்துள்ளார். இதில் காவ்யாவுக்கு உதிரப்போக்கு அதிகமாகியுள்ளது. மேலும் சித்த பிரமை பிடித்தவர் போலும் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பரமேஸ்வரி, கேரளாவில் உள்ள தனது தங்கை சித்ராவை வரவழைத்து ஜுன் 12ஆம் தேதி மாலை உடனடியாக கேரளாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில், உதிரப்போக்கு நிற்காமல் சென்றுள்ளது. மேலும், கிட்னி பாதிக்கப்பட்டு, லிவர் ஃபெயிலியர் ஆகியுள்ளது என தெரிவித்தனர். காவ்யாவின் நிலையைக் கண்ட மருத்துவர், அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்ததில் காவ்யாவுக்கு வேறு ஏதோ பிரச்சனை என தெரிந்துகொண்டு, அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். 

 

பின்னர் காவ்யாவை அனந்தபுரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சோதனை செய்ததில் காவ்யாவின் மார்பு, பிறப்புறுப்பு பகுதிகளில் பற்களால் கடித்த காயங்களும், கொடூரமான காயங்களும் இருந்துள்ளன. அதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். மருத்துவக் கல்லூரியில் சீரியஸான நிலைமையில் இருந்த காவ்யாவை பார்த்த மருத்துவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து பெண் காவலர்களும் பெண் நீதிபதியும் நேரில் வந்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது, நடந்தவை அனைத்தையும் நீதிபதியிடம் கூறி காவ்யா கதறி அழுதுள்ளார். லிவர் டிரான்ஸ்பரன்ஷன் செய்வதற்குத் தயாரான நிலையில், ஜூன் 19ஆம் தேதி காவ்யா உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கேரள காவல்துறை புதுச்சேரிக்கு வந்து அருண்குமாரை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர்.

 

இந்தநிலையில், இன்று (24.06.2021) செய்தியாளர்களைச் சந்தித்த காவ்யாவின் தாயார் பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள், "சம்பவம் நடைபெற்ற பகுதி புதுச்சேரி என்பதால் காவ்யாவின் பெற்றோர் புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அதை அவர்கள் வாங்காமல் அலட்சியப்படுத்துவதாகவும், பாஜகவைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள் அருண்குமார் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்” என குற்றம்சாட்டினர்.

 

இதனிடையே புதுச்சேரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட பெண் காவ்யாவின் தாயாருக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.