அசாம், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்படி அசாமில் கனமழை பெய்து கொண்டிருக்கும் போது ஒரு போக்குவரத்து காவலர் ஒருவர் கொட்டும் மழையிலும் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அசாமின் குவஹாத்தி பகுதியில் மிதுன் தாஸ் என்ற அந்த காவலர் பலத்த காற்று மற்றும் மழைக்கு இடையே தனது பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.