குழந்தை திருமணங்களின்எண்ணிக்கை அதிகரிப்பால்தாய் மற்றும் குழந்தைகள்இறப்பு விகிதம்அசாம் மாநிலத்தில் அதிகமாகஇருப்பதாக மத்திய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்குஉரிய நடவடிக்கை எடுப்பதற்காகஅசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா கடந்த 23 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார். அப்போது குழந்தை திருமணங்களுக்குஎதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், குழந்தை திருமணங்களின்தீமைகள் பற்றிவிழிப்புணர்வுஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத்திருமணம்செய்தவர்கள் மீது போக்சோ வழக்கும், 14 முதல் 18 வயதுக்குட்பட்டபெண் குழந்தைகளைத்திருமணம்செய்தவர்கள்மீது குழந்தை திருமணத்தடைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க அசாம்அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் குழந்தை திருமணங்கள் தொடர்பான 4004 வழக்குகள் பதிவு செய்து, 2044 பேரை அம்மாநில காவல்துறையினர்கைது செய்துள்ளனர். மேலும் குழந்தை திருமணத்திற்குஉதவியதாக புரோகிதர்கள் மற்றும் காஜிக்கள் என 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாநில காவல்துறைடிஜிபி கூறுகையில், "அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு மேலும் இந்த நடவடிக்கை தொடரும். குழந்தை திருமணம் போன்ற சமூக விரோத செயலிலிருந்து மாநிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்குமக்கள்ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்" எனத்தெரிவித்தார்.