Skip to main content

அரசின் அதிரடி உத்தரவு; கொத்துக் கொத்தாக கைது செய்யும் போலீஸ்; என்ன நடக்கிறது அசாமில்?

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

assam government taken for child marriage incident 

 

குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அசாம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா கடந்த 23 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார். அப்போது குழந்தை திருமணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், குழந்தை திருமணங்களின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

 

14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க அசாம் அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் குழந்தை திருமணங்கள் தொடர்பான  4004 வழக்குகள் பதிவு செய்து, 2044 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தை திருமணத்திற்கு உதவியதாக புரோகிதர்கள் மற்றும் காஜிக்கள் என 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து அம்மாநில காவல்துறை டிஜிபி கூறுகையில், "அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு மேலும் இந்த நடவடிக்கை தொடரும். குழந்தை திருமணம் போன்ற சமூக விரோத செயலிலிருந்து மாநிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.