அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான வினோத் கே. தாசரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் நடப்பு நிதி ஆண்டான 2019 மார்ச் 31 வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinoth-in.jpg)
சென்னையில் நேற்று நடைபெற்ற இயக்குநர் கூட்டத்தில் இவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தாசரி தெரிவித்துள்ளார். இவருக்கு பதிலாக நிறுவனத்தின் செயல் தலைவராக தீரஜ் ஹிந்துஜா பொறுப்பேற்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)