இந்தியா ஒருகட்சி ஆட்சிமுறையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியளர்களை சந்தித்த அவர், "சீனாவை போல இந்தியாவையும் ஒருகட்சி ஆட்சி முறையை நோக்கி பாஜக மாற்றிக்கொண்டிருக்கிறது. பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும்" என தெரிவித்துள்ளார்.