/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/naik-std.jpg)
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான அசோக் சக்ரா விருதுக்கு இந்த ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான போரில் உயிரிழந்த அஹ்மத் வானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காஷ்மீரை சேர்ந்த இவர் தீவிரவாத கொள்கைகள் உடைய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து, பிறகு தீவிரவாதத்தை விடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். ஏற்கனவே திவரவாதத்திற்கு எதிரா செயல்பாட்டிற்காக இரண்டு சேனா பதக்கங்களையும் இவர் வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் 6 தீவிரவாதிகளை கொன்ற இவர் தனது உயிரையும் இழந்தார். அதற்கு மரியாதையை செலுத்தும் விதமாக இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)