ADVERTISEMENT
இந்நிலையில், தீர்ப்பளிக்கப்பட்ட அந்த தருணத்தில் ஆசாராம் பாபு எந்த நிலையில் இருந்தார் என ஜெயில் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘நீதிபதி மதுசூதனன் சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என அறிவித்து, தண்டனை விவரத்தை பிறகு அறிவிக்கலாம் எனக் கூறிய நிலையில், தனது வழக்கறிஞர்களை ‘ஏதாவது செய்யுங்கள்’ என கேட்டுக்கொண்டே இருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நேரமும் அவர் நிம்மதியற்ற நிலையிலேயே இருந்தார். நீதிபதி தன்னை குற்றவாளி என அறிவித்தபோது அவர் நொறுங்கிப் போயிருந்தார். மேல் கோர்ட்டில் இந்த வழக்குகளை எதிர்கொள்வேன் என சவால் செய்துவிட்டு, தனது அறையில் எதையோ நினைத்துக்கொண்டு சோகமாக அங்குமிங்கும் நடந்துகொண்டே இருந்தார்’ என தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments