Skip to main content

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜர்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

தச

 

கடந்த மாதம் அக்டோபர் இரண்டாம் தேதி மும்பையில் இருந்து கோவா செல்லக்கூடிய  சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

 

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் பலமுறை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாமீன் மனு பலமுறை தாக்கல் செய்யப்பட்டும் நீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு 27 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு கடந்த 28ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் அவருக்கு விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்யன் கான் மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். 

.

 


 

சார்ந்த செய்திகள்