Skip to main content

ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவுடன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று சந்திப்பு

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில், இடைக்கால பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

arun jaitley

 

கடந்த நிதி ஆண்டில் அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.10,000 கோடியை ரிசர்வ் வங்கி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அதனை அதிகரித்து ரூ.28,000 கோடி டிவிடெண்டாகத் தரலாமென ரிசர்வ் வங்கியிடம் அரசு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து இன்று நடக்கவிருக்கும் சந்திப்பில் பேச்சு வார்த்தை நடக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி கிரிக்கெட் மைதானத்துக்கு 'அருண் ஜெட்லி' பெயர்....கேலரிக்கு கோலியின் பெயர்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த மாதம் காலமானார். அவர் டெல்லி மாநில கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவராக இருந்தார். அதனால் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரை மாற்றி அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லிக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.  

 Delhi International Cricket Ground NAME ARUN JAITLY AND VISITORS SEATING BUILDING VIRAT KOHLI NAME


இதேபோல் மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் இருக்கை மாடத்திற்கு (கேலரி) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட்கோலி, ஷிகர் தவான் உட்பட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். 



 

Next Story

பிரபல கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர்... கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

 

The Ferozeshah Kotal Grounds in New Delhi will be renamed as the Arun Jaitley Stadium.

 

 

கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டிருந்த அருண் ஜேட்லிக்கு மரியாதையை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயரை வைப்பது என டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் அருண் ஜேட்லி பெயராலேயே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.