Advertisment

#ArrestShehlaRashid ட்ரெண்ட் ஆக காரணம் என்ன..? யார் இந்த ஷீலா ரஷீத்..?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும் ஷீலா ரஷிதை கைது செய்ய வலியுறுத்தி #ArrestShehlaRashid என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Advertisment

arrest shehla rashid trending in twitter

இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளை பரப்பியதால் ஷீலா ரஷீத்தை கிரிமினல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்த இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவ தலைவராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். ஜம்மு காஷ்மீர் பிரிக்கபட்டதிற்கு பிறகு காஷ்மீரில் நிலவும் சமீபத்திய சூழல் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட இவரது பதிவுகள் இந்திய ராணுவத்திற்கும், அரசுக்கு எதிராக இருப்பதாக கூறி புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா தாக்கல் செய்த மனுவில், "ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளைப் பரப்பி வருகிறார். அவரது ட்வீட்டர் பக்கம் பல ஆயிரக்கணக்கானவர்களால் பின்தொடரப் படுகிறது. இவர் வெளியிட்ட இந்தப் போலிச் செய்திகள் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டும் வருகிறது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை தேச துரோக வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் தற்போது #ArrestShehlaRashid என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவம் பொதுமக்களைத் துன்புறுத்துவதாக இவர் தனது ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே இவர் மீது இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JNU jammu and kashmir
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe