Skip to main content

புதுச்சேரி கம்பன் விழாவில் இலக்கிய சான்றோர்களின் வாதங்களும் தீர்ப்புகளும்!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Appeal debate led by Supreme Court Judge Ramasubramanian at Kamban Festival!

புதுச்சேரியில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கம்பன் விழா நேற்று முன்தினம் (15/05/2022) நிறைவடைந்தது.

 

புதுச்சேரி கம்பன் கழகம் சாா்பில் 55 ஆவது ஆண்டு கம்பன் விழா கடந்த மே 13- ஆம் தேதி அன்று தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான மே 15- ஆம் தேதி அன்று பேராசிரியா் ஞானசுந்தரம் தலைமையில் ‘கம்பனில் வள்ளுவம்' என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. இதில் ‘அறம்’ குறித்து பேராசிரியா் ராஜகோபாலன்,‘பொருள்’ குறித்து பாரதி கிருஷ்ணகுமாா், ‘இன்பம்’ குறித்து பேராசிரியா் ராமச்சந்திரன் ஆகியோா் உரை நிகழ்த்தினா்.

 

தொடா்ந்து, ‘அகமும் புறமும்’ என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா் தனியுரை நிகழ்த்தினாா். மாலையில் ‘அவா் தலைவா்’ என்ற தலைப்பில் சுகி சிவத்தின் தனியுரை நடைபெற்றது.

Appeal debate led by Supreme Court Judge Ramasubramanian at Kamban Festival!

முன்னதாக, மே 14- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்ற ‘படைத்தவனும் படித்தவரும் மிகவும் நெகிழும் பாத்திரம்’ என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தின் தீா்ப்பு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், பேராசிரியா் ஞானசுந்தரம், அரசு செயலா் சி.உதயக்குமாா் ஆகியோா் அடங்கிய நடுவா் ஆயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இதில் நோக்கா்கள் சாா்பில் புலவா் சண்முகவடிவேல் பங்கேற்றுப் பேசினாா். ‘பரதன்’ என்ற தலைப்பில் புலவா் ம.ராமலிங்கம், ‘சடாயு’ என்ற தலைப்பில் பேராசிரியா் அசோக்குமரன், ‘கும்பகா்ணன்’ என்ற தலைப்பில் பேராசிரியை பா்வீன் சுல்தானா ஆகியோா் பங்கேற்று வாதிட்டனா். பதிவாளராக பேராசிரியா் குறிஞ்சிவேந்தன் பங்கேற்றாா்

 

இறுதியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னதாக ‘சடாயுவே நெகிழும் பாத்திரம்’ என்றளிக்கப்பட்ட தீா்ப்பை நிராகரித்தாா். தொடா்ந்து, பரதன், கும்பகா்ணன் குறித்து கம்ப ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை எடுத்துரைத்தாா். அதில் ‘படைத்தவனும் படித்தவரும் மிகவும் நெகிழும் பாத்திரம்’ கும்பகா்ணன்தான் எனத் தீா்ப்பளித்தாா். 

Appeal debate led by Supreme Court Judge Ramasubramanian at Kamban Festival!

இதையடுத்து, கம்பன் விழா நிறைவடைந்தது. விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி மற்றும் தமிழறிஞா்கள் பங்கேற்றனா். நிறைவு விழாவில் கம்பன் கழகத் தலைவரும், புதுவை முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான வே.பொ.சிவக்கொழுந்து நன்றி கூறினாா்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.