Appeal debate led by Supreme Court Judge Ramasubramanian at Kamban Festival!

புதுச்சேரியில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கம்பன் விழா நேற்று முன்தினம் (15/05/2022) நிறைவடைந்தது.

Advertisment

புதுச்சேரி கம்பன் கழகம் சாா்பில் 55 ஆவது ஆண்டு கம்பன் விழா கடந்த மே 13- ஆம் தேதி அன்று தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான மே 15- ஆம் தேதி அன்று பேராசிரியா் ஞானசுந்தரம் தலைமையில் ‘கம்பனில் வள்ளுவம்' என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. இதில் ‘அறம்’ குறித்து பேராசிரியா் ராஜகோபாலன்,‘பொருள்’ குறித்து பாரதி கிருஷ்ணகுமாா், ‘இன்பம்’ குறித்து பேராசிரியா் ராமச்சந்திரன் ஆகியோா் உரை நிகழ்த்தினா்.

தொடா்ந்து, ‘அகமும் புறமும்’ என்றதலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா் தனியுரை நிகழ்த்தினாா். மாலையில் ‘அவா் தலைவா்’ என்ற தலைப்பில் சுகி சிவத்தின் தனியுரை நடைபெற்றது.

Advertisment

Appeal debate led by Supreme Court Judge Ramasubramanian at Kamban Festival!

முன்னதாக, மே 14- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்ற ‘படைத்தவனும் படித்தவரும் மிகவும் நெகிழும் பாத்திரம்’ என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தின் தீா்ப்பு உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், பேராசிரியா் ஞானசுந்தரம், அரசு செயலா் சி.உதயக்குமாா் ஆகியோா் அடங்கிய நடுவா் ஆயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதில் நோக்கா்கள் சாா்பில் புலவா் சண்முகவடிவேல் பங்கேற்றுப் பேசினாா். ‘பரதன்’ என்ற தலைப்பில் புலவா் ம.ராமலிங்கம், ‘சடாயு’ என்ற தலைப்பில் பேராசிரியா் அசோக்குமரன், ‘கும்பகா்ணன்’ என்ற தலைப்பில் பேராசிரியை பா்வீன் சுல்தானா ஆகியோா் பங்கேற்று வாதிட்டனா். பதிவாளராக பேராசிரியா் குறிஞ்சிவேந்தன் பங்கேற்றாா்

இறுதியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னதாக ‘சடாயுவே நெகிழும் பாத்திரம்’ என்றளிக்கப்பட்ட தீா்ப்பை நிராகரித்தாா். தொடா்ந்து, பரதன், கும்பகா்ணன் குறித்து கம்ப ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை எடுத்துரைத்தாா். அதில் ‘படைத்தவனும் படித்தவரும் மிகவும் நெகிழும் பாத்திரம்’ கும்பகா்ணன்தான் எனத் தீா்ப்பளித்தாா்.

Appeal debate led by Supreme Court Judge Ramasubramanian at Kamban Festival!

இதையடுத்து, கம்பன் விழா நிறைவடைந்தது. விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி மற்றும் தமிழறிஞா்கள் பங்கேற்றனா். நிறைவு விழாவில் கம்பன் கழகத் தலைவரும், புதுவை முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான வே.பொ.சிவக்கொழுந்து நன்றி கூறினாா்.