Advertisment

அர்ஜெண்டினா வெற்றி - 1000 பேருக்கு இலவச பிரியாணி!

ந

Advertisment

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றுள்ளது. பரபரப்பாக நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

அர்ஜெண்டினா பிரான்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டம் (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த வெற்றியை உலகில் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்றாலும் கேரளாவில் இந்த கொண்டாட்டம் என்பதே வித்தியாசமாக உள்ளது. கால்பந்து போட்டிகளைத் திருவிழா போல் கொண்டாடும் கேரள மக்கள் நேற்று இரவு முதல் அர்ஜெண்டினா வெற்றியைப் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதன் உச்சக்கட்டமாகக் கேரளாவைச் சேர்ந்த ராக்லேண்ட் என்ற உணவகம் 1000 பேருக்கு இலவச சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

WorldCup messi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe