Skip to main content

''பழமையான கலாச்சாரத்தை அரசியல் காரணத்திற்காக மறந்து விடுகிறோமா?'' - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

 "Are we forgetting the ancient culture for political reasons?" - Union Minister Nirmala Sitharaman's speech

 

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் இலக்கியம், ஆன்மீகம், கலை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது. அண்மையில் நடந்த இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அதேநேரம் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழறிஞர்கள், உலக அளவில் உள்ள தமிழ் அறிஞர்களை அழைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என தமிழகத்தில் சிலர் குற்றச்சாட்டும் வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தமிழ் இலக்கியக் கூற்றுக்களை பல மேடைகளில் மேற்கோள் காட்டி பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ''பிரதமர் தமிழ் இலக்கியங்களில் இருந்து திருக்குறளிலிருந்து புறநானூறு, அகநானூறிலிருந்து எடுத்து ஒவ்வொரு சபையிலும் தமிழ் பற்றி சொல்லும் பொழுது எனக்கு புல்லரிக்கிறது. அவர் ஒவ்வொரு பாஷைக்கும் ஈக்குவலான மரியாதை கொடுத்து தான் கொண்டிருக்கிறார்.

 

ஆனால், தமிழ் என்ற பொழுது அதனுடைய பழமையைப் புரிந்து கொண்டு, அதுவும் நாட்டின் பாரதத் தாயின் நாவில் இருக்கக்கூடிய மொழி என்பதால் எடுத்துச் சொல்கிறார். எல்லோரும் நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சொல்கிறார். இல்லைங்க, இந்தி திணிக்கிறார்கள் அப்படிங்கிறாங்க... இப்படி விதண்டாவாதம் பேசும் பொழுது, ஐயோ! இப்படி பெரிய ஒரு பழமையான கலாச்சாரத்தை அரசியல் காரணத்திற்காக மறந்து விடுகிறோமா அல்லது அதை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விடுகிறோமா என்று எண்ணும்போதுதான் தான் இந்த தமிழ் சங்கத்தின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.