இந்நிலையில் அதி நவீன ஏஹெச்64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி தனோவா பங்கேற்றார். அப்போது அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு பூஜை செய்து, தேங்காய் உடைத்து, அதன் பிறகு இந்திய விமானப்படையில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டது. மேலும் அப்பாச்சி ஹெலிகாப்டர் மீது வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.
அதிநவீன ஏஹெச்64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அமெரிக்கா அரசின் ஒப்புதலுடன் இந்திய அரசு பெற்றுள்ளது. தற்போது இந்தியாவுக்கு 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ள நிலையில், மீதம் வழங்க வேண்டிய 14 ஹெலிகாப்டர்கள் 2020-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வகை அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அமெரிக்கா, ஜப்பான், சவூதி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது. நான்கு பிளேடுகளுடன் சுழலும் ஹெலிகாப்டர், குறைவான உயரம் பறக்கும் திறன் கொண்டது. இரண்டு பேர் மட்டுமே ஹெலிகாப்டரில் பயணிக்க முடியும். அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் மூலம் எதிரிகளை எளிதாக தாக்கும் வல்லமை கொண்டது. மேலும் சென்சார், தொலைநோக்கு உபகரணங்கள், இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது.
#WATCH Punjab: The Apache chopper receives water cannon salute, before induction at the Pathankot Air Base. pic.twitter.com/YNT49rjr3B
— ANI (@ANI) September 3, 2019