Skip to main content

வேண்டுகோள் விடுத்த அனுராக் தாகூர்; திருப்புமுனை கொடுக்குமா டெல்லி போலீஸ்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

nn

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டி டெல்லி சந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இருப்பினும் அரசு சார்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தியிலிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர்களது பதக்கங்களை ஆற்றில் வீச நேற்று மாலை 6 மணிக்கு கங்கை நதிக்கரையில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு கூடிய விவசாய சங்கத்தினர் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை தடுத்ததோடு ஐந்து நாட்களில் நடவடிக்கை எடுக்க விட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

 

 Anurag Tagore who appealed; The investigation report of the Delhi Police is turning point

 

இந்தநிலையில் பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 'டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,  'மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. உரிய நடவடிக்கை வீரர்களுக்கு ஆதரவாக எடுக்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.

 

குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங்  இன்று செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுகையில், 'என் மீது எந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்கொள்ள தயார். காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் வழங்கும் எந்த ஒரு தண்டனையும் தான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்' என தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் டெல்லி போலீசாரின் விசாரணை அறிக்கை தான் இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என டெல்லி காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஐந்து நாட்கள் மட்டுமே விவசாய சங்கத்தினர் மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் காலக்கெடு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.