Advertisment

கேரளாவில் 9ம் தேதி முதல் கோயில்கள் திறப்பு, ஐயப்பன் கோயிலில் 50 பேர் வரை தரிசனத்திற்கு அனுமதி!

f

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 67 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

Advertisment

இந்தியாவில் நான்கு கட்ட ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் வழிப்பாட்டு தளங்கள் மற்றும் ஹோட்டல்களை திறக்க வரும் 8ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான வழிப்பாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதனிடையே கேரள மாநில அரசு வரும் 9ம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தளங்களும் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe