Skip to main content

"அரசு உறுதியளித்தது, ஆனால் நிறைவேற்றவில்லை" - உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரே..

Published on 08/12/2020 | Edited on 08/12/2020
anna hazare

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் மாபெரும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 13 ஆம் நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. மேலும், இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

 

இந்தநிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இன்று  ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார். டெல்லியில் நடைபெறும் போராட்டம் நாடு முழுவதும் பரவவேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அன்னா ஹசாரே,  விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற,  மத்திய அரசின் மீது அழுத்தம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதற்கு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடவேண்டுமெனவும் கூறியுள்ளார்.

 

மேலும்,எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி,  தேசிய வேளாண் விளைபொருட்கள் மற்றும் விலை நிர்ணயக் குழுவிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவேண்டும் எனவும், அரசு இது தொடர்பாக ஏற்கனவே உறுதியளித்தது, ஆனால் அதனை நிறைவேற்றவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஊழல் செய்வதன் மூலம் அரசு பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்" - மத்திய அமைச்சர்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

union law minister kiren rijiju talks about aravind gejirival cbi enquiry

 

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இவ்வாறு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

 

இதனைத் தொடர்ந்து, சிசோடியாவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று  (16/04/2023) அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சுமார் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு டெல்லி கலால் கொள்கையை விமர்சிக்கும் அன்னா ஹசாரேயின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்ததுடன் அந்த பதிவில், "ஆட்சியைக் கைப்பற்றியதால் இனி ஆம் ஆத்மி கட்சியினர் அன்னா ஹசாரேயின் கருத்துகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஊழல் மூலம் மக்கள் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோரை முட்டாளாக்கி உள்ளனர். மேலும் ஆட்சியை பிடிக்க அன்னா ஹசாரேயைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தற்போது ஊழல் செய்வதன் மூலம் அரசு பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

'இப்படி ஒரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை'-கெஜ்ரிவாலை சாடும் அன்னா ஹசாரே!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

'I didn't expect such a policy' - Anna Hazare slams Kejriwal!

 

அண்மையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சோதனை நடந்தது. இதனால் டெல்லி அரசியலில் பூகம்பம் வெடித்தது. சில நாட்கள் முன்பு தனது கட்சி எம்.எல்.ஏ களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளையும் பாஜக செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். 

 

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது அன்னா ஹசாரே விமர்சனங்களை வைத்துள்ளார். இது தொடர்பாக அன்னா ஹசாரே எழுதி உள்ள கடிதத்தில், 'டெல்லி முதல்வராக பதவி ஏற்ற பிறகு லோக் ஆயுக்தா, லோக்பாலை கெஜ்ரிவால் முற்றிலும் மறந்துவிட்டார். டெல்லி அரசின் மதுபான கொள்கை குறித்து வேதனைப்படுகிறேன். இப்படி ஒரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை. சட்டசபையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டுவர முயற்சி செய்யவில்லை. டெல்லியில் மூலை முடுக்கெல்லாம் மதுபான கடைகள் முளைத்து விட்டது. பேரியக்கத்தில் விளைந்த ஒரு கட்சிக்கு இது அழகா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.