Skip to main content

தம்பிக்கு உதவிய அண்ணன்... இறுதி நேரத்தில் கடனை செலுத்திய அம்பானி...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

ஸ்வீடன் தொலைத்தொடர் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்ஸன் நிறுவனத்துடன் இந்திய நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 2014-ம் ஆண்டு நாடு முழுக்க ரிலையன்ஸ் அலைவரிசை மற்றும் அதன் பராமரிப்பு ஆகியவற்றிற்காக ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 1,500 கோடி ரூபாயை ரிலையன்ஸ்  நிறுவனம் தர வேண்டும் என்று எரிக்ஸன் நிறுவனம், தேசிய நிறுவனச் சட்டம் மூலம் வழக்கு தொடர்ந்தது. அப்போது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 500 கோடி கொடுத்தால்போதும் எனத் தெரிவித்திருந்து.  

 

mukesh and anil


அந்த வழக்கில் 2018-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் எரிக்ஸன் நிறுனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்நிறுவனம் அந்த தொகையை உரிய நேரத்தில் செலுத்தவில்லை. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் திவாலானது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனில் அம்பானி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் 500 கோடி ரூபாயில் நிலுவை தொகையான 453 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிருவனத்திற்கு தரவில்லை என்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூன்று மாதங்கள் சிறை செல்ல நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 

இதனையடுத்து உடனடியாக ரூ. 260 கோடியை திரட்ட அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களிடம் அந்நிறுவனம் ஒப்புதலை கோரியது. 


கடன் வழங்கியவர்களிடம் இருந்து 260 கோடியை திரட்டினாலும் இன்னமும் 200 கோடி ரூபாயை அனில் அம்பானி செலுத்த வேண்டி நிலையில் இருந்தார். அதனால் தனது சகோதரரின் ஜியோ நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ததற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கேட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முகேஷ் அம்பானி அந்த தொகையை நேற்று அனில் அம்பானிக்கு கொடுத்திருக்கிறார் அதன் மூலம் எரிக்ஸன் நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையை அனில் அம்பானி செலுத்தியுள்ளார். எரிக்ஸன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த நீதிமன்றம் கொடுத்த நான்கு வார அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்த தொகையை முகேஷ் அம்பானியிடம் அனில் அம்பானி கேட்டது கடந்த மாதம் 23-ம் தேதி. எரிக்ஸன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த நீதிமன்றம் கெடுவித்த தேதி மார்ச் 19. இந்த நிலையில் முகேஷ் அம்பானி நேற்று இந்த தொகையை செலுத்தியுள்ளார். இதன் மூலம் அனில் அம்பானி எரிக்ஸன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை திருப்பி செலுத்தியுள்ளார்.
 

முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்த அனில் அம்பானி “இந்த நெருக்கடியான நேரத்தில் என்னுடன் துணை நின்றதற்காக என்னுடைய மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மற்றும் நிடா அம்பானிக்கு என்னுடைய உண்மையான மற்றும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் ஆதரவு அளித்ததன் மூலம் உறுதியான குடும்ப மதிப்புகளுடன் நாம் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்துள்ளார். அவர்களுடைய இந்தச் செயலால் நான் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் நன்றியுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

சாட் ஜிபிடி-க்கு போட்டியாக அம்பானி வெளியிடும் ‘ஹனூமான்’

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Ambani's new 'AI' model Hanooman to compete with chat GPT!

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும், திறம்படவும் செய்து முடிக்கிறது. அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்ட ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக தற்போது இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தளத்தை பிரபல தொழிலதிபரின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இதனையடுத்து, பல வகையான செயற்கை தொழில்நுட்பங்கள் இணையத்தில் பயன்பாட்டில் இருந்ததால் கூகுள் நிறுவனம் சரிவைக் கண்டது. 

இதனையடுத்து, ‘சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ‘பார்ட்’ என்ற செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், அனைத்து தொழில்நுட்பங்களையும் மிஞ்சும் வகையில், ‘ஜெமினி’ என்ற செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக அமைந்தது. இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் தங்களின் பணியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சாட் ஜி.பி.டி மற்றும் கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டியாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் சிறந்த பொறியியல் பள்ளிகளால் ஆதரிக்கப்படும் ‘பாரத் ஜி.பி.டி’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ‘ஹனூமான்’ என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தவுள்ளது.  11 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த ‘ஏ.ஐ’ மாடல் வருகிற மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.