Skip to main content

தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் ஆத்திரம்; குழந்தையைக் கொன்ற கொடூரத் தாய்

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Anger if constant crying; A  mother who strangled her child in jharkhand

ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடிஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிசாமுதீன். இவருக்கு அப்சனா என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 மற்றும் 2 வயதில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இதனிடையே, நிசாமுதீனுக்கும், அப்சனாவுக்கும் கடந்த சில நாட்களாக கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால், இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன் தினம் (28-12-23) நிசாமுதீனுக்கும், அப்சனாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த அப்சனா, தனது 2 வயது மகனுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை மூடியுள்ளார். 

அதன் பின்னர், அப்சனா செல்போனில் தனது உறவினருக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்போது, அவரின் 2 வயது மகன் தொடர்ந்து அழுதுள்ளான். செல்போனில் பேசவிடாமல் மகன் தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த அப்சனா, மகனின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி 2 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, அறைக்குள் வந்த நிசாமுதீன் தனது மகன் அசைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கழுத்தை நெரித்து கொலை அப்சனாவை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்