ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரக்கோரி தெலுங்குதேசம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆந்திராவிற்கு 2014-ஆம் ஆண்டு மாநில பிரிவினையின் போது சிறப்பு அந்தஸ்து தவறுவதாக வாக்குறுதியளித்தது மத்திய அரசு. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதை நிறைவேற்ற வில்லை அதன்பின் வந்த மோடி அரசும் நிறைவிவேற்றவில்லை. இதனால் தொடர்ந்து ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என வலியுறுத்தி வருகிறது தெலுங்குதேசம் கட்சி.
இந்நிலையில் தெலுங்கு தேச எம்.பி சிவபிரசாத் ஏற்கனவே சரஸ்வதி, நாரதர், பெண் வேடம் என பலபல வேடங்களில் பாராளுமன்றத்திற்கு வந்து ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரக்கோரி வலியுறுத்தி வந்தார். தற்போது வில், அம்புடன் ராமர் வேடத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.