Skip to main content

அப்படிப்பட்ட அப்பாவே தேவையில்ல... ஃபோன்ல அவர் நம்பரை டெலிட் பண்ணுமா... கதறி அழுத தாயிடம் சொன்ன பெண் குழந்தை...

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

andhra Tirupati

 

ஆந்திர மாநிலம் திருப்பதி காவல்நிலையத்திற்குச் சென்ற சரஸ்வதி என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். தனக்கு வெங்கடாஜலபதி என்ற கணவரும், 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தன் கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும், தன் கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 

இந்தப் புகார் குறித்து விசாரிப்பதற்காக போலீசார், வெங்கடாஜலபதியை அழைத்தனர். காவல்நிலையத்திற்கு காதலியுடன் வந்த வெங்கடாஜலபதி, தன் காதல் மனைவியுடன் செல்வதாகக் கூறியிருக்கிறார். இதனால் இரு பெண்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், மகளிர் காவல்நிலையத்தில் இந்தப் புகாரை அளிக்குமாறு கூறியுள்ளனர்.

 

andhra Tirupati

 

அப்போது கணவர் வெங்கடாஜலபதி தனது காதல் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். தங்களுடன் இருங்கள், உங்கள் மகளைப் பாருங்கள் என சரஸ்வதி, கணவரின் இருசக்கர வாகன சாவியைப் பிடுங்க முயற்சித்தார். அப்போது மகளும் 'டாடி', 'டாடி' என்று தந்தையை அழைத்துக் கொண்டே இருந்தார். எப்படியாவது மகளைப் பார்த்தோ, தான் கெஞ்சுவதைப் பார்த்தோ தங்களுடன் வந்துவிடுவார் என்று சரஸ்வதி நம்பினார்.

 

andhra Tirupati

 

இவற்றை கண்டுகொள்ளாமல் இருசக்கர வாகனத்தில் காதல் மனைவியுடன் அவர் பறந்தார். அப்போது 'டாடி....', 'டாடி....' என எட்டு வயது மகள் அழைத்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கண் கலங்கினர். இருசக்கர வாகனத்தில் வேகமாகப் புறப்பட்ட கணவனை துரத்திச் சென்ற சரஸ்வதி அவர் மீது செல்போனை தூக்கி எறிந்து ஆவேசகமாகக் கத்தினார். பின்னர் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு நிலைதடுமாறியபடியே நடந்து வந்த சரஸ்வதி சாலையின் நடுவே அமர்ந்து தனக்கு நியாயம் வேண்டும் கதறினார். கதறி அழுத தாயின் அருகே வந்த மகள், செல்போனில் இருந்து அப்பா நம்பரை டெலிட் பண்ணுமா? அந்த நம்பர் வேண்டாம்மா என ஆவேசமாகக் கூறினார். 

 

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீசாரே உடனடியாக மகளிர் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் அழைத்துச் சென்றோ இந்தப் புகாரை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றியிருக்கலாம். முதல் மனைவியிடம் விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம், போலீசாரே உதவியிருக்கலாம் என்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.