Skip to main content

மனைவியின் நடத்தையில் சந்தேகம்... தலையை வெட்டி வாய்க்காலில் வீசிய கணவன் போலீஸில் சரண்...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, தலையை துண்டித்து கொலை செய்த கணவன். இச்சம்பவம் ஆந்திராவிலுள்ள விஜவாடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

vijayawada

 

 

மணி கிராந்தி என்ற பெண்ணை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு பிரதீப் என்பவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர், பிரதீப்பிற்கு தன்னுடைய மனைவியின் மேல் சந்தேகம் அதிகமாக எழ, இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் பிரதீப் மணி கிராந்தியிடம் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் மணி கிராந்தி கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
 

அவரை பின் தொடர்ந்து வந்த பிரதீப் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மணி கிராந்தி ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த அரிவாலை எடுத்து சரமாரியாக மணி கிராந்தியை வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்திருக்கிறார். இதன் பின் அவருடைய தலையை துண்டித்து கையில் எடுத்துகொண்டு தெருவில் இரத்தவெறியில் நடந்து சென்றுள்ளார். அதை பார்த்த அந்த தெருவாசிகள் பிதியில் அலறி அடித்து ஓடவும், வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டுள்ளனர். 
 

மணி கிராந்தியின் தலையை அருகிலிருக்கும் கால்வாயிலில் வீசிவிட்டு, போலீஸில் சரணடைந்துள்ளார் பிரதீப்.  இதையடுத்து மணி கிராந்தியின் உடலையும், கால்வாயில் தூக்கி வீசப்பட்ட தலையையும் கைப்பற்றிய போலீசார், கொலைக்கான காரணம் குறித்து பிரதீப்பிடம் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.