Skip to main content

தனியார் பள்ளியின் அலட்சியம்... கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சிறுவன்...

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

யு.கே.ஜி. படிக்கும் மாணவன் பள்ளியில் இருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

andhra private school issue

 

 

ஓர்வக்கல் பகுதியில் உள்ள திப்பாய்பள்ளியைச் சேர்ந்த புருஷோத்தம் என்ற சிறுவன் விஜயனிகேதன் உயர்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி படித்து வந்துள்ளான். நேற்று பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை பெறுவதற்காக சிறுவன் புருஷோத்தம் வரிசையில் நின்றுள்ளான். அப்போது உணவு வாங்கும் அவசரத்தில் அவன் தவறி கொதிக்கும் சாம்பார் வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்திற்குள் விழுந்துள்ளான்.

இதனையடுத்து அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் அந்த சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துளான். குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் இருந்த பள்ளியின் பணியாளர்களின் அலட்சியத்தாலேயே குழந்தை புருஷோத்தம் இறந்துள்ளதாக கூறி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவனின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தந்தை, "நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு குறைபாடுகளால்தான் எனது மகன் இறந்தான். எந்தவித பேரமும் இன்றி எனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாயை கல்வி கட்டணமாக செலுத்தினோம். ஆனால் எனது மகனை இப்போது யார் திரும்ப அழைத்து வருவார்கள்? ஒரு சிறுவன் எப்படி சாம்பரில் விழ முடியும்? மதிய உணவு நேரத்தில் யாரும் ஏன் மாணவர்களைக் காக்கவில்லை? இது அலட்சியம் அல்லவா?" என கண்ணீருடன் கதறியது பலரது மனதையும் உருக்கியுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.