Advertisment

20,065 பேர் பாதிப்பு... 96 பேர் பலி - ஆந்திரா கரோனா அப்டேட்!

ASD

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் ஆரம்பத்தில் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் தற்போது கரோனா மீண்டும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 20,065 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 12,65,028 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 96 பேர் நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். மேலும், இதுவரை 8,615 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 10,211 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10,37,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe